கண்டிப்பதற்காகவும் புத்தி புகட்டுவதற்காகவும் எத்தனை முறை அடிக்கலாம்?
2166. அபூ புர்தா(ரலி) அறிவித்தார் : ''அல்லாஹ் விதியாக்கியுள்ள (குற்றவியல்) தண்டனைகளில் ஒன்றில் தவிர வேறு எதற்காகவும் பத்து சாட்டையடிகளுக்கு மேல் வழங்கப்படலாகாது'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறுவார்கள்.
அடிமைகளின் மீது அவதூறு கூறுதல்.
2167. 'நிராபராதியான தம் அடிமையின் மீது (விபசார) அவதூறு கூறியவருக்கு மறுமை நாளில் சாட்டையடி வழங்கப்படும். அவர் சொன்னதைப் போன்று அந்த அடிமை இருந்தால் தவிர!' என்று அபுல் காசிம் (இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Wednesday, 9 December 2009
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment